துயர் பகிர்வு

திரு. சின்னையா வசந்தகுமார்

தோற்றம் : 1962-06-20

மறைவு : 2021-01-24


  • மரண அறிவித்தல்

அத்தியடியை பிறப்பிடமாகவும் தலையாழியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா வசந்தகுமார் அவர்கள் 24.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னையா மற்றும் செல்வபாக்கயிம் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசிவம் மற்றும் வசந்தமலர் ஆகியோரின் அன்பு மருமகனும், நீலரஞ்சினி (ஞானக்குழந்தை ஆசிரியர்) யின் அன்புக் கணவரும், தாட்ஷாயினி, வைஸ்ணவதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், உதயகுமார், சுரேந்திரகுமார், ராம்குமார், ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஷாமினியின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.01.2021) திங்கட்கிழமை பி.ப 2.00  மணிளவில் தலையாழி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்று, அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
077 410 4752