துயர் பகிர்வு

வீமர் செல்லத்துரை

தோற்றம் : 1935-02-27

மறைவு : 2021-03-05


  • மரண அறிவித்தல்

உடுவில் ஸ்ரீலங்கா வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வீமர் செல்லத்துரை அவர்கள் கடந்த 05.03.2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபத       மடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வீமர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகன், திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும் இரஞ்சிதமலரின் அன்புக் கணவரும் ஜெனந்தன் (பிரான்ஸ்)   ஜெயாழினி (வகிதா), ஜெய்சிகா (தீபா, சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் உமா, நீதிராஜா, (ஆசிரியர், யா{ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம்), ஜெயராஜா ஆகியோரின் மாமனாரும், றோகித், நீதிகா, றின்திகா, ஜெனதிகா, நீருஜன், நிதர்சிக்கா, நிதா, ரொணுஜன், றிஸ்மிகா, டீனுஜன், ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற ஆச்சிப்பிள்ளை, சின்னத்தங்கைச்சி, சின்னத்துரை, இராஜதுரை (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, செல்லையா, பஞ்சாதேவி, கனகரஞ்சிதம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள், இன்று (08.03.2021) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்                        கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
T.P.:  077 071 2523, 077 646 6959
ஸ்ரீலங்கா வீதி,
உடுவில் வடக்கு,
சுன்னாகம்.