துயர் பகிர்வு

திருமதி சரவணமுத்து ஞானேஸ்வரி ( ஞானம் )

தோற்றம் : 1947-05-07

மறைவு : 2021-07-16


  • மரண அறிவித்தல்

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், மானிப்பாய் பட்டினசபை வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரவணமுத்து ஞானேஸ்வரி (ஞானம்) நேற்று (16.07.2021) வெள்ளிக் கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சீவரத்தினம் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற தம்பையா - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்புப் பாரியாரும், சசிலினி (யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி - ஆசிரியை), சசீலன் (நெதர்லாந்து), சசிதரன் (நெதர்லாந்து), சசீந்தினி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தயாரும், சற்குனேஸ்வரன் (யாழ்.ஸ்கந்த          வரோதயாக் கல்லூரி - ஆசிரியர்), மங்களாம்பிகை (நெதர்லாந்து), திஷாந்தினி        (நெதர்லாந்து), குருபரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சொர்ணலிங்கம் (தணிகாசலம்), செல்வராணி, தங்கராணி ஆகியோரின் அன்புச்      சகோதரியும், ஏகநாயகி, பாலசிங்கம், அமரர் குருநாதர் ஆகியோரின் மைத்துனியும், சாறுகா, சாவின், சங்கீர்த்தன், சந்தோஷ், சஞ்சிதா, ரணுஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.07.2021) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்                ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்பு : 077 078 4415
077 952 7293
பட்டினசபை வீதி,
மானிப்பாய்