துயர் பகிர்வு
செல்வரட்ணம் செல்வராசா
தோற்றம் : 1001-01-01
மறைவு : 2022-01-21
- மரண அறிவித்தல்
குமரக்கோட்டம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் செல்வராசா (ராசா உருத்திரா) கடந்த (21.01.2022) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் - ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் - நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் கனகேஸ்வரி (கனகபூரணம்) அவர்களின் அன்புக் கணவரும், பாலசுப்பிரமணியம், நகுலேஸ்வரி (கனடா), யோகேந்திரம், அருளானந்தம் (ஜேர்மனி), யோகராணி, சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ரஜீவன் (கனடா), நிரோசன் (வர்த்தகர்), நிசாந்தன் (வர்த்தகர்), தனுசன் (வர்த்தகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிரோஜா (கனடா), லபிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், அஸ்விகா, அஸ்விகன், அனந்திதா ஆகியோரின் பாசமிகு பேரனும் பஞ்சலிங்கம், கனகலிங்கம், இராசலிங்கம், அமிர்தலிங்கம், சரஸ்வதி, மகாலிங்கம், இந்திராணி, காலஞ்சென்ற அழகராசா மற்றும் அன்னம்மா, மஞ்சுளாநிதி, சத்தியமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.01.2022) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல் : குடும்பத்தினர் ஈஞ்சடி, சுதுமலை வடக்கு. |
|