துயர் பகிர்வு

குமாரசுவாமிக் குருக்கள் ஆனந்த குருசாமி சர்மா(ஆனந்தன் ஐயா)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2022-05-06


  • மரண அறிவித்தல்

நல்லூர் ஸ்ரீ கைலாசபிள்ளையார் கோவில் ஸ்தாபக வழிதோன்றலும் ஆதீன கர்த்தாவும், பரம்பரை நம்பிக்கை பொறுப்பாளரும், பிரதம குருவும் ஆகிய கௌசிக கோத்ர பிரம்ம ஸ்ரீ குமாரசுவாமிக் குருக்கள் ஆனந்த குருசாமி சர்மா நேற்று (06.05.2022) வெள்ளிக்கிழமை கைலாச பதம் அடைந்தார்.
அன்னார் ஸ்வர்க்கீய ஸ்ரீ குமாரசுவாமிக் குருக்கள் சாவித்திரி அம்மா ஆகியோரின் அன்பு மகனும், ஜீவஹர்ஷினியின் அன்புக் கணவரும்,
சின்மயீ, தருணி, ஹரிகேஷ் சர்மா ஆகியோரின் அன்புத் தந்தையும், பிரம்மஸ்ரீ இ.தேவசிகாமணி சர்மா ஸ்வர்க்கீய ஸ்ரீ இ.பாலபரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும், ஸ்வர்க்கீய ஸ்ரீ கு.வைத்தீஸ்வரக் குருக்கள், பிரம்மஸ்ரீ கு.கோபாலன் சர்மா ஆகியோரின் பெறாமகனும், கெ.நாகசுலோஜனா, சி.மீனலோஜினி, சு.ஜெயலட்சுமி, சு.விஜயலட்சுமி, சு.யோகாம்பிகை, வி.விஜயாம்பிகை, ந.லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 343 நாவலர் வீதி, கைலாசப் பிள்ளையார் கோவிலடியிலுள்ள அவரது இல்லத்தில் நாளை (08.05.2022) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, தொடர்ந்து தகன சமஸ்காரம் செம்மணி இந்து மயானத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்;, அயலவர்கள், கைலாச விநாயக பெருமான் அடியவர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.