துயர் பகிர்வு

திருமதி லோகேஸ்வரி சோதிநாதன்

தோற்றம் : 1949-08-15

மறைவு : 2022-06-18


  • மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு பரியாரியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கு, கருவப்புலம் வீதி 5ஆம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லோகேஸ்வரி சோதிநாதன் அவர்கள் கடந்த (18.06.2022) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் சோதிநாதனின் (Mechanic) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினம் சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும், தர்மினி (கனடா), பத்மினி (பிரான்ஸ்), ராஜினி (மாவட்ட விவசாயத்திணைக்களம், யாழ்ப்பாணம்), செந்தில்குமரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கோணேஸ்வரன் (கனடா), சுசீலன் (பிரான்ஸ்), விஜயரூபன் (முகாமைத்துவ உதவியாளர் மாவட்ட நீதவான் நீதிமன்றம், ஊர்காவற்றுறை), சுமணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,  காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, சிரோன்மணி, பாலசிங்கம், பத்மநாதன், சிவராஜா, இராசாத்தி, சரோஜினிதேவி, தேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பிறேமநாதன், சிவநாதன், காலஞ்சென்ற சர்வலோகநாதன், விமலநாதன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பேரின்பநாதன் ஆகியோரின் மைத்துனியும், கிருத்திகன், சந்தோஸ், அஸ்விகா, ஐஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று (23.06.2022) வியாழக்கிழமை   முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியை களுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்