துயர் பகிர்வு

திரு.கணபதிப்பிள்ளை சிவலிங்கம் (முன்னாள் இளைப்பாறிய பிரதிச் செயலாளர் திட்டமிடல்)

தோற்றம் : 1939-04-25

மறைவு : 2022-08-24


  • மரண அறிவித்தல்

காரைநகரை பிறப்பிடமாகவும் உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணபதிப்பிள்ளை சிவலிங்கம் (முன்னாள் இளைப்பாறிய பிரதிச் செயலாளர் திட்டமிடல்); நேற்று (24.08.2022) புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் கணபதிப்பிள்ளை தனுஸ்கோடி தம்பதியரின் மகனும் பத்மினியின் (ஓய்வுபெற்ற பிராந்திய ஆணையாளர்) அன்புக் கணவரும், சிவபாக்கியம் (இந்தியா வைத்திய கலாநிதி), மங்கையர்க்கரசி (அமரர் சட்டத்தரணி), நடராஜா (அமரர் மருந்தாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் திருச்செந்தில்வேல், ரோகிணி (அமரர், முன்னாள் யாழ் பல்கலைக்கழக நூலகர்), சதானந்தன் (இந்தியா), திருக்குமார், பேராசிரியர், நந்தகுமார் (பேராதனைப் பல்கலைக்கழகம்), ஜெயக்குமார் (U.S.A.), நளாயினி (U.K), விஜயகுமார்(U.S.A.), ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.08.2022) வியாழக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்ப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:  குடும்பத்தினர்.
077 386 8590
பத்மாலயம்,
உரும்பிராய் மேற்கு,
மானிப்பாய் வீதி.