துயர் பகிர்வு
தோற்றம் : 1941-07-13
மறைவு : 2022-10-22
- மரண அறிவித்தல்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், 16{1, கைலாயபிள்ளையார் கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தையா பரஞ்சோதிநாதன் அவர்கள் நேற்று (22.10.2022) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திருமதி புஷ்பமலர் பரஞ்சோதிநாதன் அவர்களின் ஆருயிர் கணவரும், காலஞ்சென்ற கந்தையா சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், நிஷாந்த், நர்மதா, நிஷானி (லண்டன்) ஆகியோரின் ஆருயிர் தந்தையாரும், உதயகுமார் (U.K) அவர்களின் அன்பு மாமனாரும், சன்வி (லண்டன்) அவர்களின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், தங்கராசா, இராசபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.10.2022) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
பிள்ளைகள்
16/1, கைலாயபிள்ளையார் கோவில் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.