துயர் பகிர்வு
தோற்றம் : 1950-03-26
மறைவு : 2019-10-23
- மரண அறிவித்தல்
யாழ். தண்ணீர்த்தாழ்வு, கட்டுவனைப் பிறப்பிடமாகவும், இருபாலை கிழக்கு, இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி சிவபாதலிங்கம் 23.10.2019 புதன் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லம்மா தம்பதிகளின் மகளும் காலஞ்சென்றவர்களான இராசையா - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் சிவபாதலிங்கத்தின் அன்பு மனைவியும் ஜனார்த்தனன் (BPP Engineering Pvt), தினேசன் (பிரான்ஸ்), சயந்தன் (Commercial Bank - Kodikamam), சபிந்தன் (ஆஸ்திரேலியா), ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவபாதசுந்தரம், சிவபாக்கியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் குந்தவி (D.S Office -Velanai), வினோதினி (Election Department - kilinochchi) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் கபிலேஷ், ஜஸ்மிகன், சஸ்விகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.10.2019) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இருபாலை கிழக்கு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்-
குடும்பத்தினர்.