துயர் பகிர்வு
சிவலிங்கம் இராச இராசேஸ்வரி
தோற்றம் : 0001-01-01
மறைவு : 2020-01-20
- மரண அறிவித்தல்
பலாலியை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் இராச இராசேஸ்வரி 20.01.2020 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - சின்னப்பிள்ளையின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், கந்தசாமி, சிவசண்முகவடிவேல், ஈஸ்வரன் மற்றும் ஜேர்மனியை வசிப்பிடமாக கொண்ட கவியுகவரதன் ஆகியோரின் சகோதரியும் சிவலிங்கத்தின் மனைவியும், சிவறூபியின் அன்பு தாயாரும், விஜயகுமார் அவர்களின் மாமியாரும், வினோஜன் (யாழ். இந்துக் கல்லூரி), விதுஷன் (யாழ். இந்துக் கல்லூரி), லக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் யோகராணி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி, சுமதி, சித்திரா, இந்திரா ஆகியோரின் மைத்துனியும் சுவர்ணராஜ், கபில்ராஜ், நிமல்ராஜ், ராஜி, செந்தில், ஞானா, கலா, வாணி, கோபிகா, தீபிகா ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.01.2020 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்