துயர் பகிர்வு
தோற்றம் : 1000-01-01
மறைவு : 2020-02-24
- மரண அறிவித்தல்
சிறுப்பிட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னப்பிள்ளை சின்னையா நேற்று (24.02.2020) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னை யாவின் அன்பு மனைவியும் காலஞ் சென்றவர்களான அப்பையா செல்லாச்சிப் பிள்ளை தம்பதிகளின் மகளும் காலஞ் சென்றவர்களான காசியர் சின்னம்மா தம்பதிகளின் மருமகளும் பரஞ்சோதி, மகாதேவன், பராசக்தி, சுதேஸ்வரன், கதிர்காமநாதன், ஜெயமாலா, பிரதீபன் ஆகியோரின் தாயாரும் நளினா, நந்தினி, நகுலேஸ்வரன், விஜிதா, தமிழினி, கதிர்ச்செல்வன், லோஜிதா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.02.2020) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி இத்தன் மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்