துயர் பகிர்வு

தோற்றம் : 1938-02-10
மறைவு : 2020-07-05
- மரண அறிவித்தல்
வேலணையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை (நல்லூர்) வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வநாயகம் நேற்று (05.07.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா - இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - இரத்தினவல்லி தம்பதியரின் அன்பு மருமகனும், சுகிர்தாமலரின் (ஆசை அம்மா), பாசமிகு கணவரும், திருமகள், லோகநாதன், ரகுநாதன், செல்வநாதன், காலஞ்சென்ற சண்முகநாதன் (கிளி) ஆகியோரின் அன்புத் தந்தையும், அருளானந்தம், ஞானேஸ்வரி, மதிவதனி, ஜீவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனும், திருவருள்செல்வன், அபிவர்மன்,அபிராமன், டனுசன், அபிஷன், அனுஷன், தர்ஷனா, தீபானா, அஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.07.2020) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.