துயர் பகிர்வு
தோற்றம் : 1948-01-14
மறைவு : 2020-08-16
- மரண அறிவித்தல்
தாவடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வீரபாகு செல்லத்துரை (ஆசாரியர்) நேற்று (16.08.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வீரபாகு - சின்னம்மா தம்பதியரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் யோகேஸ்வரி யின் (சந்திரா) அன்புக் கணவரும், லலிதாம்பாள், தயாட்சன், கவிதா (பிரான்ஸ்), விஜிதா, விஜிதரன், கோகிலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், வரதராஜா, ஜானகி, விஜய மோகன் (பிரான்ஸ்), கேதீஸ்வரன், அஸ்வினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனும், காலஞ்சென்றவர்களான பூரணம், இராசமணி, ஐயாத்துரை, முருகையா மற்றும் பூமணி காலஞ் சென்றவர்களான குமாரசாமி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், பிதுஷிகா, துவாரகா, துளசிகா, கார்த்திகா (பிரான்ஸ்), வெஸ்ணா (பிரான்ஸ்), டனி (பிரான்ஸ்), லிந்துஜன், தனுசாந், கிரிசாந், டனுஜா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.08.2020) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.30 மணியளவில் தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
வன்னியசிங்கம் வீதி,
தாவடி வடக்கு, கொக்குவில்.
தகவல்:
குடும்பத்தினர்.
077 153 0592 , 077 533 2717